ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா..., சந்திரமுகியின் கொஞ்ச நேரம்... உட்பட ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களை எழுதியவர் யுகபாரதி. ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்ற பாடலாசிரியராக, கடந்த 14 வருடங்களாக பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார் யுகபாரதி. பாடலாசிரியர் யுகபாரதி விரைவில் வசனகர்த்தா யுகபாரதியாக அவதாரம் எடுக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் படம் ட்ராப்பான நிலையில் விஷ்ணுவை வைத்து இப்போது ஒரு படத்தை இயக்குகிறார் சுசீந்திரன். அவர் இயக்கவிருக்கும் புதிய படத்தின் மூலம்தான் யுகபாரதி வசனகர்த்தா அவதாரம் எடுத்திருக்கிறார். சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, மஞ்சிமா மோகன் ஆகியோர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ஜூலை 3 வது வாரத்தில் துவங்குகிறது.
நல்லுசாமி பிக்சர்ஸ், ஏசியன் சினி கம்பைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை 45 நாட்களில் முடிப்பதற்கு திட்டமிட்டிருக்கிறாராம் சுசீந்திரன்.
இதில் பார்த்திபன் வில்லனாக நடிக்கிறார். நானும் ரௌடிதான் படத்திற்குப்பிறகு அவர் வில்லன் வேடம் ஏற்றுள்ள படம் இது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.