விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் கத்திலான்டோடு படத்தில் நடித்து வருகின்றார். விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கத்திலான்டோடு சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகி வருகின்றது. இப்படத்திற்கு பின்னர் சிரஞ்சீவி நடிக்கவிருக்கும் 151வது படத்தை இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் சாய் ஸ்ரீநிவாஸ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க பொய்யபடி ஸ்ரீனு ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்திற்கு பின்னர் சிரஞ்சீவியின் படத்தை இயக்கும் வாய்ப்பு ஸ்ரீனுவிற்கு கிடைத்துள்ளது. தெலுங்கு திரை உலகில் ஆக்ஷன் படங்களுக்கு பெயர்போன இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு சிரஞ்சீவியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.