ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் கத்திலான்டோடு படத்தில் நடித்து வருகின்றார். விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கத்திலான்டோடு சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகி வருகின்றது. இப்படத்திற்கு பின்னர் சிரஞ்சீவி நடிக்கவிருக்கும் 151வது படத்தை இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் சாய் ஸ்ரீநிவாஸ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க பொய்யபடி ஸ்ரீனு ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்திற்கு பின்னர் சிரஞ்சீவியின் படத்தை இயக்கும் வாய்ப்பு ஸ்ரீனுவிற்கு கிடைத்துள்ளது. தெலுங்கு திரை உலகில் ஆக்ஷன் படங்களுக்கு பெயர்போன இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு சிரஞ்சீவியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.