'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் உலக புகழ்பெற்ற அப்படத்தின் நாயகன் பிரபாஸிற்கு விருதுகள் எதுவும் கிடைக்காதது அவரது ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடந்த சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த வில்லன், இயக்குனர், ஒளிப்பதிவாளர், துணை நடிகை போன்ற பிரிவுகளில் பாகுபலி திரைப்படம் விருது வென்றது. ஆனால் நாயகன் பிரபாஸிற்கு விருது கிடைக்கவில்லை.
அதே போல் பிலிம்பேர், சினிமா போன்ற குறிப்பிடத்தகுந்த விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் தற்போது நடந்த சைமா விருது நிகழ்ச்சியிலும் பிரபாஸிற்கு விருது கிடைக்கவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் பிரபாஸ் இதற்கிடையில் வேறு படங்களில் ஒப்பந்தமாகாமல் மூன்று வருடங்களுக்கும் மேலாக பாகுபலி படத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.