'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அகில் : தி பவர் ஆஃப் ஜூவா படத்தில் தோல்வியைச் சந்தித்த போதிலும் அப்படத்தின் இயக்குனர் விவி விநாயக்கிற்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது அனைவரும் அறிந்ததே. கத்திலான்டோடு என்ற பெயரில் விவி விநாயக் இயக்கி வரும் சிரஞ்சீவியின் 150வது படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இயக்குனர் விவி விநாயக்கின் இயக்கத்தில் கவரப்பட்ட சிரஞ்சீவி, தனது மகனும் நடிகருமான ராம் சரணிடம் விவி விநாயக்கின் அடுத்த படத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளார். ராம் சரண் அடுத்த படத்தின் கதை முடிவானதும் யோசிப்பதாக சிரஞ்சீவியிடம் தெரிவித்துள்ளாராம். ‛தனி ஒருவன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்தில் நடித்து வரும் ராம் சரணின் “நாயக்” படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.