'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சாதாரண ஆட்டோ தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கி மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் வில்லன் நடிகராக வலம் வந்தவர் கலாபவன் மணி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அந்த மகா கலைஞனிடம் மது பழக்கம் இருந்தாலும் நடிப்பு என்று வந்துவிட்டால் உயிரை கொடுத்து நடிப்பார். அவர் கடைசியாக நடித்த தமிழ் படம் 'புதுசா நான் பொறந்தேன்'.
குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோவாகியிருக்கும் பியோன், புதுமுகம் கல்யாணி நாயர், கராத்தே ராஜா, விஜயன், நரேஷ், உள்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் கலாபவன் மணி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இதுபற்றி படத்தின் இயக்குனர் மஜீத் அபு கூறியதாவது: கலாபவன் மணி இந்த படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் காட்சிகளை கொடைக்கானலில் படமாக்கிய போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. அதனால் நாங்கள் வேறொரு நாளில் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னோம் ஆனால் அவர் வேண்டாம் என்னால் நீங்கள் கஷ்டப்பட கூடாது இப்போதே நடிக்கிறேன் என்று கூறினார்.
நாங்கள் புது யூனிட்டாக இருந்தும் கூட அவர் எங்களுக்கு அந்த சூழ்நிலையிலும் மறுக்காமல் தண்ணீர் தொட்டியில் மூழ்கி சண்டை போடும் காட்சியில் நடித்தார். பிறகு இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பை நடத்தினோம். கடுமையான காய்ச்சலையும் பொருட்படுத்தால் நடித்துக் கொடுத்தார். அவர் கடைசியாக நடித்தது எங்கள் படம் தான். ஜூலை 8ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்கிறார் இயக்குனர் மஜீத் அபு.