இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியிருக்கிறது. ஆனாலும் அதிலும் ஒரு வித்தியாசமாக அவர் நடித்த 'தங்க மகன்' படம் மற்ற ஊர்களில் 100 நாட்கள் ஓடியது. மதுரையில் மட்டும் 247 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த அளவிற்கு மதுரை மக்களை 'தங்க மகன்' கவர்ந்தான்.
1983 நவம்பர் 4ந் தேதி வெளியான இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் பூர்ணிமா ஜெயராம், ஏ.ஜெகநாதன் இயக்கி இருந்தார், இளையராஜா இசை அமைத்திருந்தார். ரஜினிக்காகவே உருவாக்கப்பட்ட பழிவாங்கும் ஆக்ஷன் கதை. இதில் ரஜினி 'பெஷவாடா பீமாரெட்டி' என்ற இன்னொரு தெலுங்கு மைனர் கெட்அப்பில் நடித்திருந்தார். அந்த வேடம் மதுரை ஜனங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
அதோடு படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். “பூ மாலை ஒரு பாவையானது...”, “மச்சான பாருடி மச்சமுள்ள ஆளுடி...”, “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ....” “அடுக்குமல்லி இது ஆள் பிடிக்குது...” போன்ற இனிமையான பாடல்களை இப்போது கேட்டாலும் காதில் தேன்பாயும். 'நுவ்வா நேனு' என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கும் பிரமாண்ட வெற்றி பெற்றது. சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பனும், தியாகராஜனும் இணைந்து தயாரித்திருந்தனர்.