டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இதுவரை 149 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் என்ற தனிக்கட்சியை தொடங்கி, அதையடுத்து காங்கிரசில் இணைந்து மத்திய அமைச்சரானார். ஆனால் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்ற அவர், மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார். முன்னதாக தனது மகன் ராம்சரண்தேஜா தெலுங்கில் நடித்த புருஸ்லீ என்ற படத்தில் நட்புக்காக ஒரு சிறிய வேடத்தில் நடித்து ரீ-என்ட்ரி கொடுத்த சிரஞ்சீவி தற்போது தனது 150 வது படமான கத்திலன்டோடு படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் விஜய் நடித்து வெளியான கத்தி படத்தில் ரீமேக்கான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். மேலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் சினிமாவில் நடிப்பதால் முன்பிருந்த வேகம் அவரிடத்தில் இருக்காது என்றுதான் ஆந்திர ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சிக்காக அவரை வைத்து ஒரு எபிசோட் படமாக்கியுள்ளனர். அதில் தனது முந்தைய சூப்பர் ஹிட் படங்களில் தான் நடித்த சில காட்சிகளில் மீண்டும் அதே வேகத்துடன் நடித்துக்காட்டி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி விட்டாராம் சிரஞ்சீவி.