‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சமூகத்துக்கு பயன்படும் வகையிலான படங்களை மட்டுமே எடுப்பேன் என பிடிவாதமாக படங்களை இயக்கிவருபவர் மலையாள இயக்குனர் டாக்டர் பைஜூ.. அதனாலேயே தேசிய விருது, மாநில அரசு விருது, சர்வதேச திரைப்பட விருதுகள் என பலவற்றை இவரது படங்கள் வாரி குவித்து வருகின்றன.. நடித்தவர்களுக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது. அதேசமயம் இன்னொரு பக்கம் சென்சார் சான்றிதழ் பெறும் விஷயத்தில் டாக்டர் பைஜூவுக்கும் சென்சார் போர்டுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். காரணம் பைஜூ தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் அப்படி..
இதற்குமுன் கேரளாவில் எண்டோ சல்பான் என்கிற பூச்சிக்கொல்லி மருந்தால் ஏற்பட்ட பயங்கர விளைவுகளை மையப்படுத்தி 'வலிய சிறகுள்ள பட்சிகள்' என்கிற படத்தை இயக்கினார். சென்சாரில் பலகட்ட சோதனைகளை சந்தித்து ஒரு வழியாக படம் வெளியானது. தற்போது இந்திரஜித், ரீமா கல்லிங்கலை வைத்து வனத்துறை மற்றும் அதுசார்ந்த மனித உரிமை மீறலை பற்றிய கதையை 'காடு பூக்குன்ன நேரம்' என்கிற படமாக எடுத்திருக்கிறார். இந்திரஜித் போலீஸ் அதிகாரியாகவும், ரீமா மாவோயிஸ்ட்டாகவும் நடித்துள்ளார்கள். இந்தப்படமும் சமீபத்தில் சென்சார் சான்றிதழுக்காக அதிகாரிகளுக்கு திரையிடப்பட்டு காட்டப்பட்டது.
இது ஒருவகையில் அரசாங்கத்தையும் அதிகார வர்க்கத்தையும் குற்றம் சாட்டும் விதமாகவும், மாவோயிஸ்ட்கள் தரப்பு நியாயங்களை விளக்கும் படமாக இருப்பதால், சென்சார் அதிகாரிகள் நிறைய இடங்களில் வெட்டச்சொல்வார்கள் என்றும், 'ஏ' சான்றிதழ் தான் தருவார்கள் எனவும் எதிர்பார்த்தார் டாக்டர் பைஜூ.. அப்படி ஒரு கட்டாவது கொடுக்கப்பட்டாலும் கூட, அதை ஏற்றுக்கொள்ளாமல் மறு தணிக்கைக்காக படத்தை மும்பைக்கு அனுப்பவும் தயாராக இருந்தார்.. ஆனால் ஆச்சர்யத்த்ளும் ஆச்சர்யமாக சென்சார் அதிகாரிகள் ஒரு கட்டும் கொடுக்காததோடு, படத்திற்கு அனைவரும் பார்க்கும் விதமாக 'யு' சான்றிதழையும் வழங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அனைவரும் இந்தப்படத்தை கட்டாயம் பார்க்கவேண்டும் என பாராட்டியும் உள்ளனர். இன்னும் கூட நடந்தது நிஜமா என்கிற திகைப்பில் இருகிறாராம் டாக்டர் பைஜூ.