ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தற்போது சினிமா தியேட்டர்களில் தினமும் மதியம், மாலை, இரவு காட்சிகள் ஒளிபரப்பாகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை காட்சியும் இருக்கும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் 5 காட்சிகள் நடத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கும்.
இந்த நிலையில், இனி சினிமா தியேட்டர்கள் 24 மணி நேரமும் இயங்கலாம் எத்தனை காட்சிகள் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்தில் மத்திய தொழிலாளர்கள் அமைச்சகம் கொண்டு வந்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் தியேட்டர்களில் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என்பது மட்டும் நிபந்தனை.
தியேட்டர்கள் போலவே வணிக வளாங்களும் 24 மணி நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவை மாநில அரசுகள் அப்படியே ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாநிலங்கள் தனியாக சட்டத்தை உருவாக்கி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.