ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் ஸ்திரமாக காலூன்றியபின் தமிழின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளார் மலையாள நடிகர் நிவின்பாலி. அதற்கான ராஜபாட்டையை 'பிரேமம்' படம் போட்டுத்தந்து விட்டது. தற்போது அறிமுக இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் என்பவர் இயக்கும் தமிழ்ப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் நிவின்பாலி. மாபெரும் வெற்றிபெற்ற கன்னடப்படம் ஒன்றின் ரீமேக்காக உருவாகிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தின் கதாநாயகிகளாக ஷ்ரதா ஸ்ரீநாத், லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்க, முக்கிய வேடத்தில் 'சதுரங்க வேட்டை' ஹீரோ நட்டி நடிக்கிறார்.
இப்போது இந்தப்படத்தில் இன்னொரு மலையாள நடிகரான அஸ்வின் குமார் என்பவரும் இணைந்துள்ளாராம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் நிவின்பாலி நடிப்பில் வெளியான 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' படத்தில் நிவின்பாலிக்கு கிட்டத்தட்ட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தவேடத்தில் தான் முதலில் கௌதம் மேனன் நடிப்பதாக இருந்தது என்பது குறிப்பிடத்தகது.. ஆனால் இந்த புதிய படத்தில் இவர் வில்லன் இல்லையாம். சொல்லப்போனால் இந்தப்படத்தில் விளான், ஹீரோ என யாருமே இல்லையாம்.. சூழ்நிலையை பொறுத்து ஒவ்வோருமே தங்களது பாஸிடிவ் மற்றும் நெகடிவ் முகங்களை காட்டுகிறார்களாம்