ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சஞ்சய் தத். மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக சிறை சென்றதால் அவரின் சினிமா கேரியர் சரிந்தது. தற்போது சிறை வாசத்தை முடித்துவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் சஞ்சய்.
இதனிடையே சஞ்சய் தத்தின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹரானி, சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க உள்ளார். இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது துவங்கப்பட வேண்டியது, ஆனால் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை, சில பிரச்னைகளால் இப்படத்தை இயக்குநர் கிடப்பில் போட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானிக்கும், சஞ்சய் தத் வாழ்க்கை படத்தை தயாரிக்கவுள்ள தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாகத்தான் படப்பிடிப்பு துவங்கப்படாமல் இருப்பதாகவும், இவர்களுக்குள் பிரச்னை தீரும் வரை இப்படம் கிடப்பில் தான் இருக்கும் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.