டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபகாலமாக முன்னணியில் இருக்கும் ஸ்டார் நடிகர்களே தங்களுக்கான கேரக்டரின் தன்மை பொறுத்து அது நெகட்டீவ் ரோலாக இருந்தாலும் கூட நடிக்க தயாராகிவிட்டனர். உதாரணமாக கோலிவுட்டில் அஜித், மங்காத்தா படத்தில் வில்லனாக நடித்தார். பாலிவுட்டில் கூட அக்ஷ்ய் குமார் தற்போது ரஜினியின் 2.O-வில் வில்லனாக நடித்து வருகிறார். அமீர்கான், ஷாரூக்கான் போன்றோர்கள் கூட நெகட்டீவ் ரோலில் நடித்துவிட்டனர். நடிகர் சல்மான்கானோ தனக்கு நெகட்டீவ் ரோலே வேண்டாம் என்கிறார்.
சல்மாமான்கான், தற்போது தான் நடித்துள்ள சுல்தான் படத்தின் இறுதிக்கட்ட புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛‛எனக்கு வில்லனாக நடிக்க விருப்பம் இல்லை, ரசிகர்களை முழுக்க முழுக்க எண்டர்டெயின்ட்மென்ட் செய்தாலே போதும். எப்பவும் போல ஹீரோவாகவும், நல்ல மனிதனாக இருக்கும் வேடங்களிலேயே நடிக்க விரும்புகிறேன். படம் முடிந்து ரசிகர்கள் வீடு திரும்பினால் கூட என்னுடைய ரோல் அவர்களுக்கு ஞாபம் இருக்க வேண்டும், அந்தமாதிரி ரோல்களிலேயே பெரிதும் நடிக்க விரும்புகிறேன். நிஜ வாழ்க்கையில் இல்லாவிட்டால் கூட திரையிலாவது நான் அதுபோன்று இருக்க விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.