ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் |
பல வருடங்களாக திரைப்படத்துறையில் பைனான்சியராக இருப்பவர் சந்திரபிரகாஷ் ஜெயின். சுமார் 15 வருடங்களுக்கு முன்புவரை இவரும் இவரது சகோதரர் செயின்ராஜ் ஜெயின் இருவரும்தான் தமிழ்சினிமாவின் முன்னணி பைனான்சியர்கள். டி.ராஜேந்தர் உட்பட பலரும் இவர்களிடம் பணம் வாங்கித்தான் படம் எடுத்தார்கள். அப்போதெல்லாம் தமிழ்சினிமாவே இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
மதுரை அன்புவின் வருகைக்குப் பிறகு தயாரிப்பாளர்கள் மதுரைக்கு படை எடுக்கத் தொடங்க, படங்களுக்கு பைனான்ஸ் செய்யும் பிசினஸ் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு டல்லடித்தது. எனவே, ஏற்கனவே சம்பாதித்த பணத்தை வைத்து 2013ல் விஜய்யை வைத்து தலைவா படத்தைத் தயாரித்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்கிய சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு தலைவா படத்தினால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
அதன் பிறகு சினிமாவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தவர், தற்போது சந்தானம் ஹீரோவாக நடிக்க ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'தில்லுக்கு துட்டு' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார். தில்லுக்கு துட்டு படத்தின் டீஸர், பாடல்கள், டிரைலர் பார்த்துவிட்டு இந்தப்படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் தில்லுக்கு துட்டு படத்தை தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்கிறார் சந்திர பிரகாஷ் ஜெயின்.