நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான், அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்துள்ள சுல்தான் படம் தொடர்பாக பேட்டியளித்த போது இந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பும் போது ‛தான் ஒரு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போன்று உணர்ந்ததாகவும், தன்னால் நிற்ககூட முடியவில்லை'' என்றும் கூறினார்.
சல்மானின் இந்த பேச்சிற்கு பெண்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. மேலும் தேசிய மகளிர் ஆணையம் சல்மானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. சில ஊர்களில் சல்மான் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த பிரச்னை தொடர்பாக சல்மான்கான், தன் வக்கீல் மூலம் தேசிய மகளிர் ஆணையத்திற்கு பதிலளித்திருக்கிறார். அதில் சல்மான்கான் இந்த பிரச்னைக்கு விளக்கம் மட்டுமே அளித்துள்ளதாகவும், மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது. சல்மான் கான் பதில் தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வமாக மகளிர் ஆணையம் பதிலளிக்கும் என தெரிகிறது.