பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில், பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன் மகன்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஹிருத்திக் ரோஷன் தன் மகன்களுடன் துருக்கிற்கு சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலா சென்றுவிட்டு நாடு திரும்ப, துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் வந்துள்ளார். ஆனால் அவர் பயணம் செய்ய இருந்த விமானத்தை தவறவிட விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது தான் அங்கு பயங்கரவாதிகள் தற்கொலைபடை தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் ஹிருத்திக் மற்றும் அவரது மகன்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்திய திரும்பியுள்ள ஹிருத்திக் ரோஷன், தன் டுவிட்டர் பக்கத்தில் ‛‛நாடு திரும்ப தனக்கு உதவி செய்த விமானநிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும், பயங்கரவாத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.