ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் பேரனும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யா தெலுங்கில் முன்னணி இளம் ஹீரோ. அவரும், சென்னை பல்லாவரத்தை சேர்ந்த நடிகை சமந்தாவும் தீவிரவமாக காதலித்து வருவது தான் இப்போது உலகம் அறிந்த ரகசியம். ஆனால் காதலுக்கு நாகர்ஜுனா எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், அவர் சமந்தாவை அழைத்து மிரட்டியதாகவும், வளர்ந்து வரும் நேரத்தில் காதல், கல்யாணம் வேண்டாம் என்று மகனுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நாக சைதன்யாவும், சமந்தாவும் ஐதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் லிங்விங் டூ கெதராக வாழ்ந்து வரும் செய்தி வெளியானது. இது தொடர்பான வீடியோ காட்சியும் வெளியானது. இதனால் நாகார்ஜுனா சமந்தாவின் பெற்றோரை அழைத்து பேசியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சந்திப்பு நடந்துள்ளது என்பதை சமந்தா தரப்பினர் உறுதி செய்கிறார்கள். தற்போது இரு குடும்பத்தினரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.
சமந்தாவும் ஏற்கெனவே புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. நாகசைதன்யா தற்போது நடித்து வரும் படங்களை முடித்து கொடுத்த பிறகு திருமண தேதி நிச்சயிக்கப்படும் என்று தெரிகிறது. திருமணத்துக்கு பிறகு சமந்தா சினிமாவில் நடிக்க கூடாது என்று நிபந்தனை விதித்திருப்பதாகவும், அந்த நிபந்தனையை சமந்தா ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.