பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கதிர், ஸ்வப்னா மேனன், நடிக்கும் படம் 'ஒன்பதிலிருந்து பத்துவரை'. விஜய் சண்முகவேல் அய்யனார் இயக்கி உள்ளார், சி.மணிகண்டன் தயாரித்துள்ளார், எம்.கார்த்திக் இசை அமைத்துள்ளார். ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற ஜூலை 1ந் தேதி வெளிவருகிறது.
“இது ஒரு ரோட் திரில்லர் கதை. ரேடியோ ஜாக்கியாக பணியாற்றும் ஹீரோயின் ஒரு அவசர வேலையாக வெளியூர் செல்ல வேண்டும். அவள் புக் செய்யும் கால் டாக்சி டிரைவர் கதிர். இருவரும் காரில் பயணம் செய்யும்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி தகராறு வருகிறது. பின்பு கதிர், ஸ்வப்னாவின் ரசிகர் என்று தெரிந்து சமாதானமாகிறார்.
இந்த நிலையில் கதிரை போலீஸ் ஒரு கொலை வழக்கிற்காக தீவிரமாக தேடுகிறது. கதிர் கொலை செய்தது யாரை என்பதற்கும், ஹீரோயின் காரை எடுத்துக்கொண்டு ஒரு ஊருக்கு அவசரமா செல்வற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்ன என்பதுதான் கதை. காலை 9 மணிமுதல் இரவு 10 மணி வரை நடக்கிற கதை. பெரும்பலான காட்சிகள் கார் பயணத்திலேயே நடக்கிறது. என்கிறார் இயக்குனர் விஜய் சண்முகவேல் அய்யனார்.