பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இன்டிபண்டன் சினிமாக்கள் வெளிநாடுகளில் அதிகமாக எடுக்கப்படுகிறது. அதாவது வேறு துறைகளில் இருப்பவர்கள் இணைந்து ஜாலியாக எடுக்கும் படம். இப்போது அந்த மாதிரி படங்கள் தமிழிலும் வெளிவர ஆரம்பத்திருக்கிறது. சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூவில் கட்டுமான பிரிவில் உதவி மேலாளராக பணியாற்றும் மகேஷ்வர பாண்டியன் தன் நண்பர்களுடன் இணைந்து 'இயக்குனன்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமா மற்றும் அது சார்ந்த வேலைகளில் அதிக ஈடுபாடு உண்டு. அதனால் வேலையில் சேர்ந்து ஓரளவுக்கு வருமானத்தை நிலைப்படுத்திய பின்னர், ஸ்ரீதர் என்பவருடன் இணைந்து அகமுகம் என்ற குறும்படத்தை இயக்கினேன். அது தந்த அனுபவமும், தன்னம்பிக்கையும் தனியாக ஒரு படத்தை இயக்கும் தைரியத்தைக் கொடுத்தன.
முதல் படத்தின் மூலம் பெரிதும் பேசப்பட்ட ஓர் இயக்குநர் இரண்டாவது படத்துக்கான வேலைகளில் ஈடுபடும்போது அவர் முதல் படத்துக்காக உருவாக்கிய கதாபாத்திரங்கள் அவரின் பட உருவாக்கத்தில் தலையிடுகின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்லது கெட்டது என இரண்டு எண்ணங்கள் இருக்கும். அந்த எண்ணங்களில் இருந்தும், கனவுலகிலிருந்தும் அவர் எவ்வாறு மீண்டு வருகிறார், அவரால் இரண்டாவது படத்தை எடுக்க முடிந்ததா என்பது கதை.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று படப்பிடிப்பில் ஈடுபடுவோம். படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவருமே வேலை பார்த்துக்கொண்டே படத்துக்காக உழைத்தவர்கள்தான். படத்தில் இயக்குநராக ஈஸ்வர் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். இது 65 நிமிடங்கள் ஓடக்கூடிய சைக்கலாஜிக்கல் ஃபேன்டஸி இன்டிபெண்டன்ட் திரைப்படம். படத்தை துபாயில் வாழும் சாய் என்ற நண்பர் தயாரித்திருக்கிறார்.
இன்டிபெண்டன்ட் திரைப்படங்களுக்கு இந்தியாவில் பெரிய அளவில் மார்க்கெட்டிங் இல்லை. வெளிநாடுகளில் இத்தகைய படங்களைப் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் இப்படியொரு விஷயம் இருக்கிறது என்பதே நம்மவர்களுக்குத் தெரிவதில்லை. அதை அறிமுகப்படுத்தும் முயற்சியாக இதை ஆரம்பித்திருக்கிறோம்.
திரையரங்குகளை அணுகியபோது, அவர்கள் படம் சுமார் 2 மணி நேரமாவது ஓட வேண்டும் என்று கூறினர். அதனால் ஒரே திரையரங்கில் சிறப்புக் காட்சிகளாக படத்தை வெவ்வேறு நேரங்களில் இலவசமாக திரையிடத் திட்டமிட்டோம். மற்ற துறைகளில் இருந்துகொண்டேயும் திரைப்படம் எடுக்க முடியும் என்பதை உணர்ந்து இன்னும் பலர் திரையுலகில் நுழைய வேண்டும் என்பதே எங்களின் ஆசை என்கிறார் மகேஷ்வர பாண்டியன்.