டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தவறுதல் மனித இயல்புதான்.. ஆனால் அதை உணர்ந்து மன்னிப்பு கேட்பது என்பது மகத்தான செயல். அதைத்தான் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸும் செய்துள்ளார்.. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் காலமான மலையாள திரையுலகை சேர்ந்த கவளம் நாராயண பணிக்கர் என்னும் மூத்த நடிகருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என சொல்லி அவரது மகனான கவளம் ஸ்ரீகுமார் பெயரை தவறுதலாக குறிப்பிட்டு டிவிட்டரில் அஞ்சலி செலுத்தினார் மம்தா... அந்த பதிவு வெறும் 30 செகண்டுகள் மட்டுமே டிவிட்டரில் இருந்தாலும் அதற்குள் பலராலும் பகிரப்பட்டு கண்டனத்துக்கும் ஆளானது..
மம்தாவின் மேல் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் ரசிகர்கள் “ஆ..ஊ என்றால் வாய்கிழிய பேசும் மம்தா, இதைக்கூட கவனிக்க முடியாத நிலையிலா இருக்கிறார்” என கொட்டி.. ஸாரி.. திட்டித்தீர்த்தனர். மம்தா உடனே அந்த பதிவை நீக்கிவிட்டு பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார். பின் நேற்று இரவு, “கவளம் பணிக்கர் குறித்த பதிவில் தவறுதலாக குறிப்பிட்டதற்கு தயவுசெய்து என்னை மன்னியுங்கள்.. 30 செகண்டுகளில் அதை நான் தூக்கிவிட்டாலும் தவறு தவறுதான்” என தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் மம்தா மோகன்தாஸ்.