வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
காமெடி நடிகர் சந்தானம் தற்போது நடித்து முடித்துள்ள படம் 'தில்லுக்கு துட்டு', விரைவில் வெளிவர இருக்கிறது. இதனை ராம்பாலா என்பவர் இயக்கி உள்ளார். இந்த நிலையில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை 14வது சிட்டி சிவில் கோர்ட்டில் பேப்பர் பிளைட் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையார் முகமது மஸ்தான் சர்புதீன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் “இயக்குனர் ராம்பாலா எங்கள் தயாரிப்பில் 'ஆவி பறக்க ஒரு கதை' என்ற தலைப்பில் படம் இயக்குவதாக ஒப்புக் கொண்டார். அதற்கு 20 லட்சம் சம்பளம் பேசி 3 லட்சம் முன்பணமாக பெற்றார். நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் முன்பணம் கொடுக்கப்பட்டது. இதுவரை அந்தப் படத்துக்காக 80 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். எங்கள் படத்திலிருந்து விலகிக் கொண்ட ராம்பாலா, இப்போது அதே கதையைத்தான் 'தில்லுக்கு துட்டு' என்ற பெயரில் சந்தானத்தை வைத்து எடுத்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது சந்தானம் என்னை மிரட்டினர். எனக்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க படம் வெளியிட தடைவிதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம். இயக்குனர் ராம்பாலா மற்றும் சந்தானம் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரரணைக்கு வந்தது. இயக்குனர் ராம்பாலா ஆஜர் ஆனார். சந்தானம் ஆஜராகவில்லை. அவருக்கு பதில் அவரது வழக்கறிஞர் ஆஜர் ஆனார். இருதரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை ஜூலை 6ந் தேதிக்கு தள்ளி வைத்தது. இருதரப்பும் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் அதன் அடிப்படையில் இடைக்கால மனுமீது தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனால் 'தில்லுக்கு துட்டு' படம் திட்டமிட்டபடி வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.