புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
விஜய் என்னை பயப்பட வைக்கிறார் என்று டைரக்டர் பாலா கூறியிருக்கிறார். டைரக்டர் விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, அமலாபால் நடித்து செம ஹிட் ஆகியிருக்கும் "தெய்வத்திருமகள்" வெற்றியை பகிர்ந்து கொள்ளும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் டைரக்டர் பாலா. அவர் பேசி முடிந்ததும் படத்தின் டைரக்டர் விஜய் கண்கள் குளமாகி நின்றன. அப்படியென்ன பேசினார் பாலா?.
நான் எடுத்த இரண்டு படங்களில் விக்ரம் நடிச்சிருந்தார். அந்த படங்களை விட இந்த படத்தில்தான் எனக்கு விக்ரமின் நடிப்பு ரொம்ப பிடிச்சிருந்தது. "தெய்வத்திருமகள்" படம் பார்த்துட்டு நான் கண்கலங்கினேன். உண்மையில் விஜய் என்னை பயப்பட வைக்கிறார். நான் அஞ்சுவது அவரது டைரக்ஷனை பார்த்துதான் என்று பாலா பேசியதை கேட்டதும், கிடைக்காத பெரிய விருது கிடைத்த சந்தோஷத்தில்தான் கண்களை குளமாக்கிக் கொண்டார் டைரக்டர் விஜய்.