ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைத்து விட்டபோதும், அஜித்தை அவரது ரசிகர்கள் விடுவதாக இல்லை. அவர்களாகவே மன்றங்களை வைத்துக்கொண்டு அஜித் படங்கள் வெளியாகும்போது பேனர், கட்அவுட்கள் வைத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதோடு, சமூக வலைதளங்களில் அஜித்தின் போட்டி நடிகர்களுக்கு எதிராக கடும் குரல் கொடுத்து வருகின்றனர். அஜித் சம்பந்தப்படாமலேயே அவருக்கு தானாக சேர்ந்த ரசிகர்கள் தமிழகம் முழுக்க இருக்கிறார்கள்.
மேலும், வேதாளம் படத்திற்கு பிறகு தனது காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஜித் சில மாதங்களாக ஓய்வில் இருந்தார். அதையடுத்து அவர் மீண்டும் சிவா இயக்கத்தில் தனது 57வது படத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால் படப்பிடிப்பு தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், திடீரென்று குடும்பத்துடன் வெளிநாடு புறப்பட்டு சென்றார் அஜித். இந்நிலையில், ஜூலை மாதம் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விடும் என்கிறார்கள். இதற்கிடையே, மதுரையில் உள்ள அஜித் ரசிகர்கள், அவரது 57வது படத்தை வரவேற்கும் வகையில், சுமார் 100 அடி நீளத்தில் அஜித்தின் போஸ்டரை ஒட்டி, 57வது படத்திற்காக தாங்கள் காத்துக்கொண்டிருப்பது போன்ற வாசகத்தையும் அதில் பதிவு செய்துள்ளனர்