தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சில நேரங்களில் சினிமாவில் வரும் சம்பவங்கள் போலவே நிஜத்திலும் நடப்பதுண்டு. குற்றம் செய்பவர்கள், தாங்கள் ஏதாவது ஒரு சினிமாவை பார்த்து அதில் வரும் சாமர்த்தியமான குற்றக்காட்சிகளை பார்த்து, அதன்படியே பண்ண முயற்சித்ததாக சொல்வதுண்டு. சில நிகழ்வுகள் ஏதேச்சையாகவும் நடப்பதுண்டு. அப்படித்தான் நேற்று கேரளாவில் கொச்சியில் ஒரு கைதி தப்பிச்செல்ல முயற்சித்த சம்பவம் சமீபத்தில் வெளியான நிவின்பாலி நடித்த 'ஆக்சன் ஹீரோ பிஜூ' படத்தில் வரும் ஒரு காட்சியை ஞாபகப்படுத்துவதாக இருந்ததாம்.
'ஆக்சன் ஹீரோ பிஜூ' படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரான நிவின்பாலி கைதி ஒருவனை நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்வார். அப்போது சிக்னலில் நிற்கும் போலீஸ் வேனில் இருந்து தப்பிக்குதிக்கும் கைதி, நீண்ட தூரம் ஓடி தப்பிக்கும் ரிஸ்க்கை எடுக்காமல், அருகில் உள்ள வீடு ஒன்றில் புகுந்து அங்குள்ளவர்களோடு சேர்ந்து டிவி பார்ப்பதுபோல, வீட்டில் ஒரு ஆளாக நின்று கொள்வான். அந்த வீட்டிற்கு தேடிவரும் நிவின்பாலி, அங்கு நிற்பது கைதிதான் என உடனே கண்டுபுடிக்க முடியாமல் கிளம்பிவிடுவார். பின்னர்தான் அவன் கைதி என்பது நினைவுக்கு வர, அவனை பிடித்து இழுத்துச்செல்வார்.
நேற்று கொச்சியில் எத்தியோப்பிய நாட்டை சேர்ந்த ஒருவன் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் சுற்றிக்கொண்டு இருந்துள்ளான். அவனை பிடித்த போலீஸார் அவனுக்கு கைவிலங்கிட்டு ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுள்ளனர்.. ஆனால் வண்டி சிக்னலில் நின்றபோது தப்பிய அவன், மேலே சொன்ன படத்தில் வருவதுபோலவே தப்பிக்க முயற்சித்து ஒரு வீட்டிற்குள் புகுந்துள்ளான். மேலும் தனது கைவிலங்கை மறைக்க அங்கிருந்த ஒரு டீசர்ட்டையும் அணிந்துள்ளான். ஆனாலும் கொஞ்ச நேரத்திலேயே பொதுமக்கள் மூலமாக போலீசில் மாட்டிக்கொண்டான் அந்தக்கைதி.