தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1991ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படம் ரசிகர்களிடம் மட்டுமல்ல, மற்ற மொழி திரையுலகத்தினரிடமும் பிரமிப்பை ஏற்படுத்தியது. காரணம் தமிழ்சினிமா சூப்பர்ஸ்டார் ரஜினியும் மலையாள சினிமா மெகாஸ்டார் மம்முட்டியும் இணைந்து நடித்த முதல் படம் அது என்பதால் தான். அப்படி ஒரு முயற்சி மணிரத்னம் என்பதாலேயே சாத்தியமனதாக கூட இன்றுவரை சொல்லப்படுவதுண்டு. ஆனால் தளபதி படம் உருவாவதற்கு சுமார் சில வருடங்களுக்கு முன்பே மம்முட்டியையும் ரஜினியையும் இணைத்து மலையாளத்தில் ஒரு படத்தை உருவாக்க முயற்சி நடந்தது இன்னும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ய்ப்பு இல்லை.
மம்முட்டி நடித்த நியூடெல்லி என்கிற சூப்பர்ஹிட் படத்தை தயாரித்த ஜாய் தாமஸ் என்பவர் அதைத்தொடர்ந்து மம்முட்டியையும் ரஜினியையும் இணைத்து வெண்மேக அம்சங்கள் என்கிற படத்தை ஆரம்பித்தார். அப்போது பீக்கில் இருந்த சுமலதா தான் கதாநாயகி. போட்டோகிராபரான மம்முட்டி, சினிமா நடிகையான சுமலதாவை காதலித்து திருமணம் செய்வதுதாகவும். அதன்பின் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய நினைக்கையில் மம்முட்டியின் நண்பரான ரஜினிகாந்த் வந்து அவர்களது பிரிவை தடுத்து அவர்களை சேர்த்து வைப்பதாகவும் கதையை பின்னியிருந்தர்களாம்.
படப்பிடிப்பும் தொடங்கி சில நாட்கள் நடந்ததாம். ஆனால் படத்தின் கதைமீது பலருக்கும் நம்பிக்கை இல்லாமல் போனதால் சில நாட்களிலேயே படப்பிடிப்பை நிறுத்திவிட்டர்களாம். ஏற்கனவே வெளியான இரண்டு படங்களின் கதை போலவே இது இருந்ததும், அதில் ஒன்றில் ஏற்கனவே இதேபோன்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் என்றும் ஒரு காரணம் சொல்லப்பட்டது.. இன்னொரு பக்கம் ஏற்கனவே இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த மம்முட்டி, சுமலதா ஜோடி இந்தப்படத்திலும் நடித்தால் எடுபடாது என்றும் கூட காரணங்கள் சொல்லப்பட்டதாம். எது எப்படியோ ரஜினி மலையாளத்தில் நடிக்கும் பாக்கியத்தையும் நாம் அந்தப்படத்தை பார்க்கும் பாக்கியத்தையும் இழந்துவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும்.