டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
புற்றுநோயால் பாதிக்கப்பட்டாலும் கூட மன உறுதியுடன் போராடி அதை வென்று இன்று வெற்றிகரமான நடிகையாகவும் வலம் வருபவர் தான் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ். இன்னொரு பக்கம் கணவருடன் விவாகரத்து செய்த அவர், மண வாழ்க்கையிலும் சோபிக்கவில்லை.. ஆனாலும் ரசிகர்கள் குறிப்பாக சோஷியல் மீடியாக்களில் உலாவரும் ரசிகர்கள் அவரை இரக்க சுபாவத்துடன் பார்க்க மறுக்கிறார்கள்.. காரணம் மம்தா மோகன்தாஸின் செயல்பாடுகள் அப்படி.. சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவுக்கு ஆபாசமான உடையில் வருகை தந்த மம்தா மோகன்தாஸ் சோஷியல் மீடியாவில் ஏராளாமான கண்டனங்களை சந்தித்தார்..
அதன்பின் பின்பு வெளிநாடு சென்ற அவர், “இப்போதுதான் டார்ச்சர் தராத, என்னை தொந்தரவு செய்யும் மனிதர்கள் இல்லாத இடத்தில் நிம்மதியாக இருக்கிறேன்” என பதிவிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இப்போது லேட்டஸ்டாக மலையாள திரையுலகை சேர்ந்த கவளம் நாராயண பணிக்கர் என்னும் மூத்த நடிகருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என சொல்லி அவரது மகனான கவளம் ஸ்ரீகுமார் பெயரை தவறுதலாக குறிப்பிட்டு டிவிட்டரில் அஞ்சலி செலுத்தினார்.. இதுபோதாதா காத்திருக்கும் ட்ரோல் மன்னர்களுக்கு..? உடனடியாக அவர்கள் களத்தில் இறங்கி பதில் ட்வீட்டுகளால் கலாய்க்க ஆரம்பிக்க, உடனடியாக இந்த ட்ரோல் மன்னர்களுக்கு பயந்துகொண்டு அந்த பதிவை நீக்கிவிட்டார் மம்தா மோகன்தாஸ். ஆனால் அதன்பிறகு உண்மையிலேயே இறந்தவருக்கு