ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் சினிமாவில் சில பெண் இயக்குனர்கள் தொடர்ந்து படங்கள் இயக்கி வருகிறார்கள். ஆனால் தமிழில், சுகாசினி, ரேவதி உள்பட பல பெண் இயக்குனர்கள் ஒவ்வொரு படத்தோடு காணாமல் போய் விட்டனர். இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், 3 படங்களை இயக்கினார். அவரைத் தொடர்ந்து துரோகி பட டைரக்டர் சுதா பின்னர் இறுதிச்சுற்று என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். அதன்பிறகுதான் கோலிவுட் சினிமாவில் பெண்களாலும் படம் இயக்கி சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை சிலருக்கு ஏற்பட்டது.
அதையடுத்து, ராஜா மந்திரி படத்தை இயக்கியுள்ள உஷா கிருஷ்ணன் இயக்கிய நிலையில், தற்போது இன்னொரு பெண் இயக்குனரும் களமிறங்குகிறார். இவர் தனுஷ் நடித்த மரியான் படத்தில் நெஞ்சே எழு -என்ற பாடலை எழுதியவர். அதோடு அந்த படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினாராம். இந்த நிலையில், தற்போது ஒரு கமர்சியல் கதையுடன் அவர் இயக்குனராகியிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க சில நடிகர்களின் கால்சீட் கேட்டு வரும் அவர், சமுத்திரகனியையும் ஒரு முக்கிய வேடத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.