கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சன்மூன் கம்பெனி நிறுவனம் தயாரித்துள்ள படம் 'சண்டிக்குதிரை'. இதில் சின்னத்திரை தொகுப்பாளர் ராஜ்கமல் ஹீரோவாக நடிக்கிறார். மானசா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர கஞ்சா கருப்பு, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் அன்புமதி இயக்குகிறார். வாரஸ்ரீ பாடல்களை எழுதி இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. பாடல்களை வெளியிட்டு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது:
சின்ன படம் சின்ன படம் என எல்லோரும் பேசுகிறார்கள். எது சின்ன படம் எது பெரிய படம், யார் நிர்ணயிப்பது, எல்லாம் வெற்றியை வைத்து தான். கமல் நடித்த 'அவர்கள்' படம் வெறும் 10 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டதுதான். ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்த 'மூன்று முடிச்சு' படம் பத்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டதுதான். நான் இயக்கிய முதல் படமான 'புரியாத புதிர்' 30 லட்சம் ரூபாய் செலவிலும், 'சேரன் பாண்டியன்' 33 லட்சம் ரூபாய் செலவிலும் தான் எடுக்கப்பட்டது. படங்கள் வெற்றிபெறும் போதுதான் எல்லோரும் பெரிய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆகிறார்கள். சின்ன படமாக இருந்தாலும் படத்தை நன்றாக எடுத்தால் தான் “பெரிய“ என்கிற இடத்தை அடைய முடியும் என்றார் கே.எஸ்.ரவிகுமார்.