கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
'அட்டக்கத்தி' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனவர் சி.வி.குமார். அதன் பிறகு பீட்சா, பீட்சா-2, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக உள்ளார். அவர் 'மாயவன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.
'யாருடா மகேஷ்' படத்தில் நடித்த சந்தீப் கிஷன் ஹீரோவாகவும், 'பரமன்' படத்தில் நடித்த லாவண்யா திரிபாதி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர டேனியல் பாலாஜி, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், அக்ஷரா கவுடா, பகவதி பெருமாள், மைம் கோபி, ஜெயபிரகாஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார், ஜிப்ரான் இசை அமைக்கிறார். படம் பற்றியும், இயக்குனரானது பற்றியும் சி.வி.குமார் கூறியதாவது:
இப்படத்தின் கதையை நான் எழுதிய பிறகு நலன் குமாரசாமியை அழைத்து இதை இயக்கி தரச் சொன்னேன். கதையினை படித்தவர் நன்றாக இருக்கிறது. நான் திரைக்கதை அமைத்து தருகிறேன். நீங்களே இயக்குங்கள் என்று கூறினார். எனக்கு முதலில் படம் இயக்க தயக்கம் இருந்தது. ஆனால் நலன் உட்பட என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் என்னால் இதனை இயக்க முடியுமென்ற நம்பிக்கையை அளித்தனர்.
அதன் பின்னர் மும்முரமாக படம் இயக்கும் வேலையில் இறங்கி, தற்போது படப்பிடிப்பு நிறைவடையும் நிலைக்கு வந்து விட்டது. படத்தின் திரைக்கதையை க்ரைம் த்ரில்லர் பின்னணியில் அமைத்திருக்கிறோம். படம் நாங்கள் நினைத்தவாறு சிறப்பாக வந்திருக்கிறது. எனக்கு இது வரை நாங்கள் தயாரித்த அனைத்து படங்களிலும் பட துவக்கம் முதல் முடிவு வரை அனைத்திலும் எனது பங்களிப்பு இருந்துள்ளது. எனவே பட இயக்கத்தை தைரியமாக மேற்கொண்டேன். ஆனால் தயரிப்பாளராக இருந்து ஒரு படத்தின் இயக்குனரை வேலை வாங்குவதற்கும், இயக்குனராக வேலை செய்வதற்கும் இருக்கும் வித்தியாசத்தை எனக்கு இப்படம் உணர்த்தியது. இப்படத்தினை நான் இயக்குகிறேன் என கூறியவுடன் தான் தயாரிப்பதாக ஞானவேல்ராஜா முன் வந்தார். அவரின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து எங்கள் திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட்ஸ் இப்படத்தினை தயாரிக்கிறது. என்றார்.