ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர்சங்க தலைவராக இருப்பவர் குணச்சித்திர நடிகரான இன்னொசன்ட்.. அதுமட்டுமல்ல தற்போது ராஜ்யசபா எம்.பியுமாக பதவி வகித்து வருகிறார்.. இவர் கடந்த நான்கு வருட காலமாக புற்று நோயால் அவதிப்பட்டு, அதன்பின் டெல்லி வரை சென்று சிகிச்சை பெற்று, புற்று நோயுடன் போராடி நலமுடன் கேரளா திரும்பினார்.. இதனால் புற்றுநோயின் கொடுமையான தாக்குதலை அவர் நன்கு அறிந்திருந்ததால் கேரளாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக ஒரு புதிய திட்டத்தை மலையாள நடிகர்சங்கம் மூலம் கொண்டுவர தீர்மானித்து அதை நேற்று நடைபெற்ற நடிகர்சங்க பொதுக்குழுவில் வைத்து தீர்மானமாக நிறைவேற்றவும் செய்துள்ளார்.
இதன்படி கேரளா நகரமெங்கும் நடமாடும் கேன்சர் கிளினிக்குகளை ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளனர். இன்னும் நான்கு மாதங்களுக்குள் இவை படிப்படியாக அமைக்கப்படும் இந்த கிளினிக்குகள் மூலம் கேன்சரின் தாக்குதலுக்கு ஆளானவர்கள் அதன் தீவிரத்தை குறைக்க சிகிச்சை பெறுவதற்காக மிகப்பெரிய நகரங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளை தேடி ஓடாமல், தங்கள் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிளினிக்குகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அதற்காகவே கிராமப்புற பகுதிகளை தேர்வுசெய்து இந்த கிளினிக்குகள் அமைக்கப்பட இருக்கின்றனவாம். மேலும் தங்குவதற்கு வீடு கூட இல்லாத ஆதரவற்ற 52 குடும்பத்தினரை தேர்வு செய்து அவர்களுக்கு வீடுகட்டித்தரவும் நடிகர்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனராம்.