ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகில் அதிகப்படியான கிண்டல்களையும், கேலிகளையும் பெற்ற படமாக அமைந்தது 'அஞ்சான்' திரைப்படம். சுமார் 2 வருடங்களுக்கு முன்னதாக வெளிவந்த இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் கிழிகிழியென்று கிழிக்கப்பட்டது. படத்தை இயக்கிய லிங்குசாமிக்கு அந்தப் படத்தின் தோல்வி தயாரிப்பாளராகவும் அவரை அதல பாதாளத்திற்குத் தள்ளியது. அதன் தாக்கம் அவரது தயாரிப்பிலிருந்து ஐந்தாறு படங்களையும் விட்டு வைக்கவில்லை. 'ரஜினி முருகன்' படம் எப்படியோ தப்பித்தவறி வெளிவந்தது. 'இடம் பொருள் ஏவல்' படம் முடிந்தும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. பாலாஜி சக்திவேல் இயக்கும் 'ரா ரா ராஜசேகர்', பன்னீர் செல்வம் இயக்கும் 'நான்தான் சிவா' ஆகிய படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டன.
'ரஜினிமுருகன்' படத்தை வெளியிட்ட வகையில் பலருக்கும் இன்னும் கடன் பாக்கி தர வேண்டியுள்ளதாம். இதனிடையே, லிங்குசாமி அடுத்து தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க உள்ள படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கப் போவதாகச் சொல்லப்பட்டது. தற்போது இந்தப் படம் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அல்லு அர்ஜுன் அடுத்ததாக ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் தெலுங்கில் மட்டுமே நடிக்க உள்ளார்.
லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டதற்கான காரணம் என்ன என்பது வெளியில் வரவில்லை. ஆனாலும், 'அஞ்சான்' என்ற மாபெரும் தோல்வியைக் கொடுத்த இயக்குனரின் படத்தில் நடித்து எதற்கு 'ரிஸ்க்' எடுக்க வேண்டும் என்று அல்லுவின் நெருக்கமான வட்டாரங்கள் அவரை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே, கடைசி நிமிடத்தில் அல்லு அர்ஜுன் மனம் மாறிவிட்டார் என்கிறார்கள்.
அதன் பின் லிங்குசாமியே, விஷாலிடம் நேரடியாகச் சென்று 'சண்டக் கோழி 2'வை ஆரம்பிக்கலாம் எனக் கேட்டிருக்கிறார். தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்த விஷாலும் சரியென சம்மதித்துவிட்டாராம். 'சண்டக்கோழி' முதல் பாக வெளியீட்டிற்குப் பிறகு பிரிந்த விஷால், லிங்குசாமி மீண்டும் 'சண்டக்கோழி 2'க்காக இணைந்தார்கள். பின்னர் லிங்குசாமியின் தாமதம் காரணமாக மீண்டும் பிரிந்தார்கள். தற்போது மீண்டும் இணைய உள்ளார்கள். படத்தின் பெயர் ராசியோ என்னவோ அவர்களை அடிக்கடி சண்டை போட வைக்கிறது. படம் வெளிவரும் வரை சண்டை போடாமல் இருந்தால் சரி....