டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி, 2002ம் ஆண்டு தமிழக - கர்நாடக நதி நீர் தொடர்பான பிரச்னை எழுந்தபோது, நதிநீர் இணைப்பிற்காக ரூ.1 கோடி வழங்குவதாக ரஜினி அப்போது அறிவித்தார். ஆனால் ரஜினி சொன்னபடி நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியை தரவில்லை என்றும், ஒரு மாதத்துக்குள் ரஜினி அளிக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம் என, தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளது. ஆனால் ரஜினி, ஏற்கனவே அறிவித்தபடி நதிநீர் இணைப்பிற்கு ரூ.1 கோடி நிதி அளித்துவிட்டதாக அவரின் சகோதரர் சத்யநாராயண கூறியுள்ளார்.
தஞ்சை கோவிலுக்கு வந்த சத்ய நாராயணா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‛‛அமெரிக்காவில் ரஜினி நலமாக இருக்கிறார். கபாலி படம் ஜூலை 15ம் தேதி ரிலீஸாக இருப்பதாக செய்தி வந்துள்ளது. பட ரிலீஸ்க்கு முன்னர் நிச்சயம் அவர் சென்னை வந்துவிடுவார் என்றார். மேலும் நதிநீர் தொடர்பாக ரஜினி அறிவித்த ரூ.1 கோடி நிதி குறித்த செய்தியாளர்கள் கேட்டபோது, ரஜினி ஏற்கனவே சொன்னபடி அந்த ஒரு கோடியை தேசிய வங்கியில் டெபாசிட் செய்துவிட்டார். நதிநீர் இணைப்பு திட்டம் துவங்கியதும் நிச்சயம் அந்த தொகை அந்த திட்டத்திற்கு கொடுக்கப்படும்''.
இவ்வாறு சத்ய நாராயணா கூறினார்.