ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல நடிகர் நடிகைகள் சினிமாவில் நடித்துக்கொண்டே கடை திறப்பு விழாக்கள், விளம்பர படங்களில் நடித்து பல வழிகளிலும் பணம் சம்பாதித்து வருகிறார்கள். அந்த வகையில், சமந்தா கடை திறப்பு விழாக்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆனால் அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்ற சமந்தாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவரை பெரும் அவஸ்தைக்கு பிறகே ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து மீட்டார்கள் போலீசார்.
அதேபோல் நேற்றைய தினம் மதுரையில் நடைபெற்ற வீகேர் 32-வது கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் சமந்தா. அவரது வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனபோதும் சமந்தாவை காண துடித்த ரசிகர்கள் கூட்டம் மேடையை நோக்கி முன்னேறியது.
இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, விழா மேடை சரிந்ததோடு, ஒலி பெருக்கி கருவிகளும் கீழே விழுந்து விட்டதாம். அதோடு சமந்தாவின் சொகுசு கார் டயரை யாரோ விசமிகள் குத்தி கிழித்து பஞ்சராக்கி விட்டார்களாம். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததோடு, சமந்தாவை பாதுகாப்பாக உள்ளே அனுப்பி பின்னர் வேறு காரில் அவரை தங்கும் ஹோட்டலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.