டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மூன்று வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் தான் 'நீலாகசம் பச்சக்கடல் சுவண்ண பூமி'.. சமீபத்தில் வெளியான 'களி' படத்தை இயக்கிய சமீர் தாஹிர் தான் இந்தப்படத்தை இயக்கி இருந்தார்.. இந்தப்படத்தில் துல்கரின் காதலியாக நடித்தவர் பலோமா மொன்னப்பா.. அதன்பின் இவரை எந்தப்படத்திலும் பார்க்க முடியவில்லை. ஆனால் இப்போது துல்கருடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடித்துவருகிறார் என்கிற செய்தியும் அதை உறுதிப்படுத்தும் விதமாக துல்கரும் பலோமாவும் இணைந்துள்ள போட்டோவும் வெளியானது.
அமல் நீரத் இயக்கும் இந்தப்படத்தில் பலோமா தான் கதாநாயகி என்றும் சொல்லப்பட்டது. ஆனால் விசாரித்ததில் டிஸ்கவரி சேனலில் 'இந்தியா மை வே' என்கிற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பலோமா, இந்த நிகழ்ச்சியை படம் பிடிப்பதற்காக இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதாகவும், அப்படி கேரளா வந்தபோது அமல் நீரத், தான் துல்கரை வைத்து இயக்கும் படத்தின் சில காட்சிகளையும் படம்பிடிக்க சொன்னதாகவும் அதனால் தான் இந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதில் துல்கருடன் இணைந்த புகைப்படத்தை பார்த்துத்தான் அவர் துல்கருடன் மீண்டும் நடிக்கிறார் என்கிற தவறான செய்தி பரவிவிட்டதாம்.