தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹிட் படங்களை கொடுத்தால் அந்த வெற்றி அப்படியே தொடரவேண்டுமா என்ன..? மலையாளத்தில் 'ஹவ் ஓல்டு ஆர் யூ' மற்றும் தமிழில் '36 வயதினிலே' ஆகிய ஹிட் படங்களின் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி சமீபத்தில் வெளியான 'ஸ்கூல் பஸ்' பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடித்த அந்த படம் குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் காட்டவேண்டிய அணுகுமுறையை சொன்னது. ரோஷன் ஆண்ட்ரூஸ் படங்கள் பொதுவாகவே இப்படி ஏதாவது மெசேஜ் சொல்பவையாகத்தான் இருக்கும்.
இப்போது தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. ஏற்கனவே அவர் பிளான் பண்ணி வைத்திருந்த 'நாளே ராவிலே' கதையைத்தான் படமாக இயக்க இருக்கிறார். அவரது ஆஸ்தான கதாசிரியர்களான பாபி-சஞ்சய் இருவரும் தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார்கள். உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் தயாராகும் இந்தப்படத்தில் முதலில் பிருத்விராஜ் நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகிக்கொள்ள, இப்போது குஞ்சாக்கோ போபன் அவருக்கு பதிலாக நடிக்க இருக்கிறார். 'ஹவ் ஓல்டு ஆர் யூ', 'ஸ்கூல் பஸ்' படங்களை தொடர்ந்து ரோஷன் ஆண்ட்ரூஸ்-குஞ்சாக்கோ போபன் கூட்டணி சேரும் மூன்றாவது படம் இது.