சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
'டைம் மிஷின்' படம் என்றாலே அந்த மாதிரியான படங்களை ஹாலிவுட்டில் மட்டுமே பார்க்க முடியும். அவர்கள்தான் அதற்கான விஷயங்களைச் செய்வார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், தமிழ்த் திரையுலகத்திலும் அம்மாதிரியான படங்களைக் கொடுக்க முடியும் என்று இரண்டு படங்கள் நிரூபித்தன. கடந்த வருடம் இதே நாளில் வெளிவந்த 'நேற்று இன்று நாளை', 50 நாட்களுக்கு முன்பு வெளிவந்த '24' ஆகிய படங்கள் டைம் மிஷின் கதையை மையமாகக் கொண்டு ரசிகர்களைக் கவர்ந்த படங்களாக அமைந்தன.
'இன்று நேற்று நாளை' படத்தை குறைந்த பட்ஜெட்டில் அறிவியில் சமாச்சாரங்கள், கிராஃபிக்ஸ் அது, இது என அதிக செலவில்லாமல் கதையை மட்டுமே மையமாக வைத்து, கற்பனை செய்து பார்க்க முடியாத திரைக்கதையை வைத்து ஒரு அருமையான படத்தை தன்னுடைய அறிமுகப்படுத்திலேயே கொடுத்திருந்தார் இயக்குனர் ரவிகுமார். அந்தப் படத்திற்கு மட்டும் இன்னும் அதிக பட்ஜெட் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பலரும் படத்தைப் பற்றி கருத்து சொன்னார்கள்.
அதே டைம் மிஷினை வைத்து சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடிக்க 50 நாட்களுக்கு முன்பு வெளிவந்த '24' படம் ஸ்டார் வேல்யூ, பிரம்மாண்டம் ஆகியவை இருந்தும் கதை என அழுத்தமாக எதுவும் இல்லாததால் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனது. இந்தப் படத்திற்கு செலவு செய்த தொகையை 'இன்று நேற்று நாளை' இயக்குனரிடம் கொடுத்திருந்தால் சூப்பரான ஒரு படத்தைக் கொடுத்திருப்பாரோ என்னமோ...?.
'இன்று நேற்று நாளை' படம் வெளிவந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. '24' படம் வெளிவந்து இன்றுடன் 50 நாட்களாகிறது. வெற்றியோ, தோல்வியோ இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக அனைவரையும் பேச வைத்த படங்களாக இருந்தது தமிழ் சினிமாவிற்குப் பெருமைதான்.