சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தமிழ் இருக்கை அமைப்பின் சார்பில் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்குவதின் அவசியம் குறித்த விளக்க விழாவும், தமிழ் இருக்கை கீதம் குறுந்தகடு வெளியீட்டு விழாவும் சென்னையில் நேற்று நடந்தது. இதில் குறுந்தகட்டை வெளியிட்டு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேசியதாவது:
தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்று விட்டது. அது மட்டும் போதுமா தமிழின் புகழ் உலக அரங்கில் எதிரொலிக்க வேண்டாமா? ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் உலகின் தொன்மையான மொழிகளுக்கு தனி இருக்கை உள்ளது. தமிழ் மொழிக்கென்று தனி இருக்கை இல்லை. தமிழ் சமூகம் எழுந்து நின்றால்தான் உலகில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களிலும் தமிழ் இருக்கைகளை உருவாக்க முடியும். தமிழால் வாழும் வியாபாரிகளும், கல்வி தந்தைகளும் ஆளுக்கு ஒரு கோடி கொடுத்தால் உலகில் உள்ள அனைத்து பல்கலைகழங்களிலும் தமிழ் இருக்கைகள் கொண்டு வர முடியும். தமிழால் வாழும் நடிகர்கள் கொடுத்தால் போதும். அவர்கள் கொடுக்காவிட்டாலும் ஒரு அறிக்கை விட்டால் போதும் அவர்களது ரசிகர்கள் வரிந்து கட்டிக்கொண்டு கொடுப்பார்கள். தமிழ் மொழிக்காக இதை நீங்கள் செய்யுங்கள். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் பேசினார்.