அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கிக் படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமானவர் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ், தற்போது டிஷ்யூம் படத்தில் நடித்து முடித்திருப்பவர், அடுத்தப்படியாக கைவசம் சில படங்கள் வைத்திருக்கிறார். இந்நிலையில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான டான் படங்களின் வரிசையில் விரைவில் 'டான்-3' உருவாக இருக்கிறது. இதில் முதல் இரண்டு பாகங்களில் நடித்த ப்ரியங்கா சோப்ரா, மூன்றாம் பாகத்தில் நடிக்கவில்லை. அதனால் அந்த ரோலில் ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்க இருப்பதாக செய்தி வந்தது. ஆனால் இதனை ஜாக்குலின் மறுத்துள்ளார்.
இது குறித்து ஜாக்குலின் பெர்ணான்டஸ் கூறியிருப்பதாவது... ''இப்போது தான் மும்பைக்கு வந்தேன். வந்ததுடன் நான் 'டான்-3'யில் நடிப்பதாக செய்தி கேள்விப்பட்டேன். எங்கிருந்து இது போன்று செய்தி கிளம்புகிறது என்று தெரியவில்லை. டான் படம் தொடர்பாக யாரும் என்னிடம் பேசவில்லை, இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார்.