இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிவர் மஜீத். அவர் தற்போது பைசா என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீராம், ஆரா, நாசர், மயில்சாமி, சென்ட்ராயன், மதுசூதன்ராவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஜே.வி இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 1-ந்தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடபெற்றது.
அப்போது டைரக்டர் அப்துல் மஜீத் பேசுகையில்,
இந்த படத்தை குப்பை பொறுக்குபவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படமாக்கியிருக்கிறேன். குப்பை பொறுக்குபவர்களின் வாழ்க் கையில் இருக்கும் பிரச்சினை, போராட்டம் சொல்லியிருக்கிறேன். அதோடு, அவர்களது தொழில் தெருக்களில் குப்பை பொறுக்குவதுதான் என்றாலும், காலை தொடங்கி மதியத்தோடு 400 ரூபாய் வரை சம்பாதித்துவிடுபவர்கள், மாலை 4 மணிக்கு பிறகு இரவுக்குள் 300 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் சம்பாதிக்கிறார்கள். அதனால் நல்ல வருமானம் உள்ள தொழில்தான்.அதேசமயம், குப்பை பொறுக்கு வதுதால் சமூகத்துக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது போன்ற விசயங்களையும் சொல்லியிருக்கிறேன்.
இந்த படத்தில் ஸ்ரீராம் முதன்முறையாக நாயகனாக நடித்துள்ளார். நான் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக நடித்துள்ளார். அதேபோல் பெண்ணே பெண்ணே என்ற பாடல் சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு நல்ல படத்தை இயக்கிய திருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும், சிலர் தாங்கள் சம்பந்தப்படாத பெரிய நடிகர்களின் படங்களின் ஆடியோ விழாக்களுக்கு அழைத்தால்கூட செல்கிறார்கள். ஆனால் இந்த படத்தில் சம்பந்தப்பட்ட சில நடி கர்களை நான் ஆடியோ விழாவுக்கு வருமாறு அழைத்தபோது, அந்த படப்பிடிப்பில் இருக்கிறேன். வெளியூரில் இருக்கிறேன் என்று சொல்லி வர மறுத்து விட்டனர். படத்துக்கு ஒப்பந்தம் செய்தபோது ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக சொன்னவர்கள், இப்போது வரவில்லை என்றும் தனது வருத்தத்தை பதிவு செய்து கொண்டார் டைரக்டர் அப்துல் மஜீத்.