பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நாசர் இயக்கிய அவதாரம் படத்தில் வில்லனாக நடித்தவர் பாலாசிங். அதன்பிறகு இந்தியன், கன்னத்தில் முத்தமிட்டாள், தீனா, சாமி, விருமாண்டி, ஜிகர்தண்டா, பூலோகம் என பல படங்களில் நடித்த அவர், தற்போதும் சில படங்கள் மட்டுமின்றி ஆதிரா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பாலாசிங் சீரியல் ஸ்பாட்டுகளுக்கு செல்லும்போது, சீரியல் நடிகர் - நடிகைகளிடம் ரொம்ப சகஜமாக பழகினாராம். ஓய்வு நேரங்களில் அவர்களிடம் செம காமெடி அரட்டையிலும் ஈடுபட்டாராம். பாலாசிங் சினிமா நடிகர், சீரியல் நடிகர்களிடம் சகஜமாக பழக மாட்டார் என்று நினைத்து விலகியே நின்ற நடிகர்கள், அவர் தங்களிடம் இயல்பாக பேசிப்பழகியதைப் பார்த்து ஆச்சர்யமடைந்தார்களாம்.
இதுபற்றி பாலாசிங் கூறுகையில், நான் சினிமா நடிகன் என்றாலும், சினிமா- சீரியல் இரண்டிற்குமிடையே பெரிய மாற்றம் தெரியவில்லை. திரைதான் வித்தியாசம். அதேபோல் நடிகர் நடிகைகளும் எனக்கு வித்தியாசம் கிடையாது. எல்லோரையும் ஒரேமாதிரியான கலைஞர்களாகத்தான் பார்க்கிறேன் என்று கூறும் பாலாசிங், இனிமேல் நான் சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார்.