ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படம் - சண்டக்கோழி. யுவன் இசையமைத்த இப்படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தன்னுடைய ஜி.கே பிலிம் கார்ப்பரேசன் பட நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். 2005 ஆம் ஆண்டு இப்படம் வெளியான போதே லிங்குசாமி - விஷால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு இவருவரும் எதிரிகளைப்போல் இருந்தனர்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் லிங்குசாமி - விஷால் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சண்டக்கோழி - 2 படத்தில் மீண்டும் இணைய இருந்தனர். மருது படத்துக்குப் பிறகு சண்டக்கோழி 2க்கு தேதிகள் ஒதுக்கி இருந்தார் விஷால். லிங்குசாமியோ விஷால் படத்தை பாதியில் நிறுத்திவிட்டு அல்லு அர்ஜூன் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கப்போனார். அதனால் கடுப்பான விஷால், "சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணி மீது முழுக் கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. சண்டக்கோழி 2 கைவிடப்படுகிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
விஷால் - லிங்குசாமி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சண்டக்கோழி - 2 ட்ராப்பானது. இந்நிலையில், விஷால் - லிங்குசாமி இருவருமே நேரில் சந்தித்து பிரச்சினைகளைப் பேசி முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இதனால் சண்டக்கோழி 2 மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது. தற்போது அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்கிவிட்டு, சண்டக்கோழி 2 படத்தை லிங்குசாமி இயக்குவாராம். சண்டக்கோழி - 2 பட விவகாரத்தில் முட்டிக்கொண்ட லிங்குசாமி - விஷால் இருவரும் மீண்டும் ராசியானது ஏன்?
இருவருமே இறங்குமுகத்தில் இருப்பதுதான் அடிப்படையான காரணம்.