தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் கௌதமிபுத்ர சதர்கனி எனும் சரித்திர படத்தில் நடித்து வரும் பாலகிருஷ்ணா அப்படத்திற்கு முன்னதாகவே இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் க்ரிஷ் கூறிய கௌதமிபுத்ர சதர்கனி படத்தின் கதை பிடித்துவிட்டதால் தனது 100வது படத்தை வரலாற்று படமாக பாலகிருஷ்ணா மாற்றி விட்டார்.
மேலும் 101வது படமாக கிருஷ்ண வம்சியின் படத்தில் நடிக்கவும் பாலகிருஷ்ணா முடிவு செய்தார். இதற்கு மறுப்பேதும் சொல்லாத கிருஷ்ண வம்சி தற்போது “நக்ஷத்ரா” எனும் திகில் படத்தை இயக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். சந்தீப் கிஷான் மற்றும் ரெஜினா ஜோடி சேர்ந்து நடிக்கும் இப்படத்தில் கன்னட நடிகர் சுதீப் மற்றும் காஜல் அகர்வால் போலீஸாக நடிக்கின்றனர். இப்படத்தை முடித்த பின்னர் பாலகிருஷ்ணாவின் 101வது படத்தை கிருஷ்ண வம்சி இயக்குவார் என கூறப்படுகின்றது.