தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி முதல் பள்ளி சிறுவர்கள் வரை கலந்து கொண்டார்கள். பெங்களூருவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை பிபாசா பாசு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கலந்து கொண்டார். பிபாசா பாசு யோகா கற்றவர், மற்றவர்களுக்கும் கற்று கொடுப்பவர் என்ற முறையில் அவர் அழைக்கப்பட்டிருப்பதாவே அனைவரும் கருதினர். ஆனால் அவர் கர்நாடக அரசிடம் ஒரு கோடியோ 50 லட்சம் பெற்றுக் கொண்டு தான் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதோடு பிபாசா பாசின் விமான செலவு, தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் செலவு அனைத்தையும் கர்நாடக மாநில அரசு செய்துள்ளது. ஒரு நடிகையை அழைத்து வர மக்கள் வரிப்பணத்தை செலவு செய்வதா என்று அந்த மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் கேள்வி எழுப்பி உள்ளன. அதோடு மக்கள் நலன் சார்ந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பணம் வாங்கிய பிபாசா பாசுவை நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.