தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சந்தானம் நடித்துள்ள 'தில்லுக்கு துட்டு' படம் முடிவடைந்து வெளிவரத் தயாராக இருக்கிறது. இந்தப் படத்துக்கு தடைகேட்டு பேப்பர் பிளைட் பிக்சர்ஸ் நின்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சென்னை 14வது சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
எங்கள் நிறுவனத்தின் சார்பில், 'ஆவி பறக்க ஒரு கதைக் என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க முடிவு செய்தோம். இந்த படத்தின் இயக்குனராக ராம்பாலா நியமிக்கப்பட்டார். அதற்காக ரூ.11 லட்சம் சம்பளம் பேசி, ரூ.3 லட்சம் அவருக்கு முன்தொகையும் கொடுக்கப்பட்டது. படத்தின் நாயகனாக நடிகர் சிவா, கதாநாயகியாக நடிகை நந்திதா ஆகியோரை தேர்வு செய்து, அவர்களுக்கு முன்தொகையாக பல லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த படத்துக்காக இதுவரை ரூ.81 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளேன்.
இந்த நிலையில், இயக்குனர் ராம்பாலா, என்னுடைய 'ஆவி பறக்க ஒரு கதைக் படத்தின் கதையை, 'தில்லுக்கு துட்டுக் என்ற தலைப்பில் எடுத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர்கள் தங்களது பண பலத்தினால், இந்த படத்தை விரைவில் வெளியிட உள்ளனர். இந்த படம் வெளியானால், எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, 'தில்லுக்கு துட்டுக் என்ற படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக வருகிற 28-ந் தேதி இயக்குனர் ராம்பாலா, நடிகர் சந்தானம் ஆகியோர் நேரில் ஆஜராகவேண்டும்க் என்று நோட்டீசு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.