ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம் படங்கள் அவர்களுக்கு பெரிய வெற்றியாக அமைந்தது. ஆனபோதும் தனது மூன்றாவது படமான வடசென்னையை சிம்புவை வைத்து இயக்க முடிவு செய்திருந்தார் வெற்றிமாறன். ஆனால் திடீரென்று என்ன நடந்ததோ அந்த படத் தையே கிடப்பில் போட்டு விட்டார். சில வருடங்களாக படம் இயக்குவதில் இருந்து விலகியிருந்தவர், பின்னர் விசாரணை படத்தை இயக்கினார். அதை யடுத்து மீண்டும் வடசென்னையை தூசு தட்டியிருக்கிறார். அந்த படத்தில் அவரது ஆஸ்தான ஹீரோவான தனுஷே நடிக்கிறார்.
மேலும், ஆடுகளம் படத்தில் சேவல் சண்டையை மையமாக வைத்து படமாக்கிய வெற்றிமாறன், வடசென்னை படத்தில் கேரம்போர்டு விளையாட்டை மையமாக வைத்துள்ளாராம். அதனால் கேரம் காய்ன்களை எப்படி விரலால் சுழற்றியடிக்க வேண்டும் என்கிற பயிற்சி தனுசுக்கு கொடுக்கப்படுகிறதாம். அதற்காக ஒரு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டிருக்கிறாராம். தற்போது ஜெயில் செட்டில் சில காட்சிகளை படமாக்கி வரும் வெற்றிமாறன், விரைவில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகிறாராம். மேலும், இந்த வடசென்னை படம் மூன்று பாகங்களாக படமாக்கப்பட இருப்பதாக இப்போதே அறிவித்துள்ளனர்.