டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டார்லிங் படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளியான படம் திரிஷா இல்லன்னா நயன்தாரா. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படம் ஆரம்பத்தில் பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியபோதும், இளைஞர் பட்டாளம் அந்த படத்தை சூப்பர் ஹிட்டாக்கியது. அதன்காரணமாக ஜி.வி.பிரகாஷின் மார்க்கெட்டும் எகிறிது. அதையடுத்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு, புரூஸ்லி, கடவுள் இருக்கான் குமாரு, கெட்ட பையன்டா இந்த கார்த்திக் என பல படங்க ளில் கமிட்டானார். இதுதவிர மேலும் சில படங்களில் நடிக்கவும் கதை கேட்டிருக்கிறார். அந்த வகையில், விஜயசேதுபதிக்கு பிறகு அதிக படங்களில் நடிக் கும் நடிகராகியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
இந்த நிலையில், திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அதையடுத்து சிம்பு நடிப்பில் ‛அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற படத்தை இயக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார். அதையடுத்து அவர் திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறாராம். சமீபத்தில் அவரும், ஜி.வி.பிரகாசும் சந்தித்தபோது அந்த படத்திற்கான கதையையும் முடிவு செய்து விட்டார்களாம். அதனால் சிம்புவின் டிரிபுள் ஏ படப்பிடிப்பு முடிந்ததும், ஜி.வி.பிரகாஷின் திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் 2-ஆம் பாகத்தையும் தொடங்குகிறாராம் ஆதிக் ரவிச்சந்திரன்.