பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல மலையாள நடிகரும் முன்னாள் தமிழ் நடிகை சரிதாவின் முன்னாள் கணவருமான முகேஷை காணவில்லை என கேரளாவில் கொல்லம் தொகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக மலையாள சினிமாவில் நடித்துவரும் முகேஷுக்கு எம்.எல்.ஏ ஆகவேண்டும் என்கிற அவரது நீண்டநாள் ஆசை சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலில் நிறைவேறியது.. கொல்லம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார் முகேஷ்.
ஆனால் கொல்லம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸார் நேற்று அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றுக்கு சென்று, எங்களது எம்.எல்.ஏ முகேஷை அவர் வெற்றிபெற்ற பின்னர் எங்கள் தொகுதிப்பக்கமே பார்க்கமுடியவில்லை.. கடைசியாக அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது பார்த்ததுதான். அவரை கண்டுபிடித்து தாருங்கள் என மேன் மிஸ்ஸிங் புகார் கொடுத்துள்ளார்களாம். தேர்தலில் ஜெயித்து எம்.எல்.ஏ ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது.. அதற்குள்ளாகவே எதிராளிகளின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் முகேஷ்.