இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். முன்னணி நடிகராக இருந்தபோதும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது சல்மானின் இயல்பாகிவிட்டது. சமீபத்தில் அவர் கூறிய கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது சல்மான், ‛சுல்தான்' படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று விட்டு வரும்போது, தான் கற்பழிக்கப்பட்ட பெண் போன்று உணர்ந்ததாக கூறினார். இது பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இந்த கருத்து தொடர்பாக சல்மான் கான் மீது நடிவடிக்கை கோரி இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோவை சேர்ந்த சமூகர் ஆர்வலர் ரப்தாத் ஜமால் என்பவர் லக்னோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேப்போன்று கான்பூரில் வக்கீல் ஒருவரும் கான்பூர் கோர்ட்டில் சல்மான் மீது வழக்குபதிவு செய்துள்ளார்.