விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
திருமணத்திற்கு பின், இளம் வயது அம்மாவாக, சண்டை மற்றும் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களில் நடித்த நதியாவுக்கு, தொடர்ந்து நடிக்கும் ஆர்வம் மேலோங்கியுள்ளது. அதனால், 'சமுதாயத்தில், 40 வயது பெண்களுக்கு எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன; அம்மாதிரி பிரச்னைகளை மையமாக வைத்து படமெடுத்து, என்னை போன்ற முன்னாள் கதாநாயகிகளுக்கு வாய்ப்பு கொடுங்கள்...' என்று, தன் அபிமான இயக்குனர்களிடம் கேட்டு வருகிறார். அத்துடன், இந்திப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த நதியா, இந்தியில், நடுத்தர வயது நடிகைகளுக்கு நடிக்க, போதுமான வாய்ப்பு கிடைத்து வருவதால், தற்போது, சில இயக்குனர்களை அணுகி, வாய்ப்பு கேட்டு வருகிறார். காலம் போன காலத்தில் காய்ந்ததாம் பேய் சுரைக்காய்!
— எலீசா