தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முன்னாள் நடிகர் சங்க தலைவரான சரத்குமார், கடந்த சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில், சரத்குமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இணைய தளங்களில் வைரலாக செய்தி பரவியது.
இதையடுத்து, அந்த செய்தி குறித்து ராதிகா சரத்குமார் தனது டுவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், சரத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது உண்மைதான். ஆனால் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்படவில்லை. புட் பாய்சன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நல்ல குணமடைந்து விட்டார். அதனால் அவர் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக பரவிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.